புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துலா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்வுகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடுமுழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது.