விருதுநகர்: நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா பரவல் காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், விருதநகரையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு தினங்களாக உச்சகட்ட அளவிலான பாதிப்பு எண்ணிக்கைகளே இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 240 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.