ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், நேற்று பொருட்களை வாங்க பஜாரில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் குவிந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த அச்சம் இல்லாமல் பொதுமக்கள் சுற்றுவதால், நகரில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மருந்துக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் 10 நாட்களுக்கு மூடப்படும். மளிகைப் பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் டோர் டெலிவரி செய்ய வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.