மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவில் விசாரணை நடத்திய விவகாரத்தில் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து டிஐஜி உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிவண்ணன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு செல்போனில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். இதுபோன்று அடிக்கடி நள்ளிரவில் பேசியதால், அந்த பெண் அப்போதைய டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.