சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் அதிகப்படியான நாட்களில் உயர்ந்தும்,சில நாட்களில் மட்டும் குறைந்தது. ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24-ம்தேதி தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. சவரன் ரூ.37,272க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்சமான விலையாகும். கொரோனா பாதிப்பு நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் 1-ம் தேதி அன்றைய விலை கடந்த மாதம் 24-ம் தேதி சாதனையை முறியடித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.53 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,684க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து, ரு.37,472க்கும் விற்பனையானது.