சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் பட்டப்பகலில் சாலையோரம் ஹாயாக படுத்திருந்த சிறுத்தையை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. நேற்று காலை திம்பம் மலைப்பாதை 27வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் சிறுத்தை ரோட்டில் ஹாயாக படுத்திருந்தது.