மதுரை: பதவி உயர்வின்போது மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கணக்கிட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றுபவர் வேதநாயகி. இவரது பெயரை கடந்தாண்டு வெளியான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்க்கவில்லை. மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணி புரியவில்லை எனக்கூறி பட்டியலில் பெயர் சேர்க்க மறுத்து விட்டனர். இந்த பட்டியலை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி, வேதநாயகி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இவரைப்போல் மேலும் சில பெண் அரசு ஊழியர்கள் மனு செய்திருந்தனர்.