செய்யூர்: சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்யூர் வட்டம் சூனாம்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆசிரியர் வீ.ஆறுமுகத்தின் 107ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சூ.க.ஆதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் கோபுராஜ், முன்னாள் மாணவர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.