அண்ணா பல்கலை., பிரதான நுழைவு வாயிலில் வர மாநகராட்சி ஊழியர்களுக்கு தடை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயிலில் வர மாநகராட்சி ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழக கட்டிடங்கள் கொரோனா தடுப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. பிரதான நுழைவுவாயிலில் அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் நுழைவு வாயிலில் மட்டுமே மாநராட்சி ஊழியர்களுக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: