கொரோனாவிற்கு முன்பே போலீசாரின் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு நிலை மோசமாகி இருக்குமே : நீதிபதிகள் கவலை

மதுரை : கொரோனாவிற்கு முன்பே போலீசாரின் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு நிலை மோசமாகி இருக்குமே என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் என்பது காவல்துறையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் 10.6% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையின் போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 254 மனநல நிபுணர்கள் போலீசாருக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறார்கள் என்றும் வெவ்வேறு சோதனைகளின் அடிப்படையில் போலீசார் மன அழுத்தம் கணிக்கப்படுகிறது என்றும்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: