சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் விடுப்பும், உரிய பாதுகாப்பும் வழங்க உத்தரவு!!

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையின் போது, காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு பேச இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். விடிய விடிய போலீசார் அடித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் ரேவதி சாட்சியம் அளித்தார்.ரேவதியின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே உண்மை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: