புதுடெல்லி: நாட்டில் ஒரே நாளில் 19459 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஆறாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டேரின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கொரோனா நோய் தொற்று விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 3,57,783 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,10,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,21,722பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 58.67 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.