புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் மத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஞாயிற்றுகிழமை நிலவரப்படி கொரோனாவால் 17,721 பேர் பாதித்துள்ளனர். இதுவரை 399 பேர் இறந்துள்ளனர். அங்குள்ள மத வழிபாட்டு தலங்கள் ஜூன் 30ம் தேதி வரை திறக்கப்படாது என்று கடந்த மாதம் 31ம் தேதி அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அங்கு கிராம புறங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: