மதுரை: மதுரை அண்ணா நகர் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடை பூட்டி இருந்த நிலையில் செல்போன்களை கொள்ளையடித்தது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.