திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் ஐதராபாத் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் ஐதராபாத் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட் வெங்கடேஷ் என்பவரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வெங்கடேஷ் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தடையாக இருந்த லாவண்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதற்காக, குழந்தை இல்லை எனக் கூறி லாவண்யாவிடம், வெங்கடேஷ் தகராறு செய்தும், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி வந்தாராம். இந்நிலையில், கடந்த 25ம் தேதி லாவண்யா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். முன்னதாக, லாவண்யா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘வெங்கடேஷை நான் காலித்து திருமணம் செய்து கொண்டேன். அதனால், அவர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொண்டேன்.