புதுடெல்லி: ‘நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி எந்த திட்டமும் இல்லாமல் கொரோனா வைரசிடம் சரண் அடைந்து விட்டார்,’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் சீனா தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைபாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 5 லட்சத்தை கடந்தது. இது குறித்து ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் புதிய, புதிய பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது.