ஆக்லேண்ட்: ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் மக்களை திசை திருப்பும் தவறான பதிவுகள் முடக்கப்படும்,’ என பேஸ்புக் அறிவித்துள்ளது. டிவிட்டருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவுகிறது. அவருடைய சமீபத்தில் பல பதிவுகளை டிவிட்டர் நீக்கியது. ஆனால், பேஸ்புக் அதை செய்ய மறுத்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், அவர்கள் பதிவிடும் திசை திருப்பும் செய்திகள் தவறானவை என குறியீடு செய்யப்படும் என்றும், மிகவும் தகுதியற்றவை முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிர்வாகம் நேற்று திடீரென அறிவித்தது.