இஸ்லாமாபாத்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபாநானக் குருத்வாராவையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் நான்கு கிலோமீட்டர் நீள புதிய பாதை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் தனது பகுதியில் உள்ள இந்த சாலையை பாகிஸ்தான் மூடியது.
இந்நிலையில், மகாராஜா ரஞ்சீத் சிங் நினைவு தினத்தையொட்டி கர்தார்பூர் வழித்தட சாலையை மீண்டும் திறப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.