வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், வீடு முற்றிலுமாக சிதறி தரைமட்டமானது. வேலூர் மாவட்டம் வாலாஜாவில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேட்டைக்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை தாங்களாகவே தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், தமிழன் என்பருடையே வீட்டில் 6 பேர் உறவினர்களுடன் கூடி, வேட்டைக்காக நாட்டுவெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் வெடிவிபத்தில் சிக்கி பலத்த காயமைந்துள்ளனர்.