சென்னை: சென்னை திருவெற்றியூரில் 21வயது இளம் பெண்ணை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் பெரிய குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அந்த பெண்ணின் வாயை பொத்தி அருகே உள்ள ரயில்வே இருப்பு பாதைக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்து உள்ளான்.