21வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி.: பலாத்காரம் செய்ய முயன்ற 17 வயது சிறுவன் கைது

சென்னை: சென்னை திருவெற்றியூரில் 21வயது இளம் பெண்ணை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் பெரிய குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அந்த பெண்ணின் வாயை பொத்தி அருகே உள்ள ரயில்வே இருப்பு பாதைக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்து உள்ளான்.

இதனையடுத்து அந்த பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட அந்த சிறுவன் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த எண்ணூர் போலீசார் அந்த சிறுவனை கைது செய்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவன் என்பதும், மது போதையில் அந்த பெண்ணிடம் தவறாக கடந்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

Related Stories: