பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் வடலூரை அடுத்த ஆபத்தானபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். மேல்மாம்பட்டு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, தம்பதியின் செல்போனில் சுகாதாரதுறையினர் தொடர்பு கொண்டு, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான தகவலை தெரிவித்துள்ளனர்.