காரைக்குடி: காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குண்டுவீச்சில் கிரைண்டர், மிக்ஸி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் செந்தில்குமார் (40). சிங்கப்பூரில் வேலை பார்த்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி திரும்பினார். நேற்றிரவு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஏசி அறையில், தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. செந்தில்குமார் எழுந்து வந்து பார்த்த போது, சமையலறையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி மற்றும் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தார். இருப்பினும் பொருட்கள் எரிந்து நாசமாகின.