மதுரை: மதுரை மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு குறித்து, நிலைமையை ஆராய்ந்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் பரிசோதனையை அதிகரிக்க, அதிகரிக்க தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்களின் நலன் காக்கவே அத்துமீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்பட்சத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கப்படும்.