ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.26.15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.26.15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில்   ஆனைமலை மட்டுமின்றி, கோட்டூர், மீனாட்சிபுரம், அம்பராம்பாளையம், சுப்பேகவுண்டன்புதூர், ஒடையக்குளம், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களை சேர்ந்த 121 விவசாயிகள் மொத்தம் 638 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர்.  

அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.  இதில், முதல் தரம் 339 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.90.20 முதல் அதிகபட்சமாக ரூ.96.50 வரையிலும். இரண்டாம் தரம் 299 மூட்டை கொப்பரை கிலோ ரூ.60.60 முதல் ரூ.70 வரையிலும் என மொத்தம் 31 டன் கொப்பரை ரூ.26.15லட்சத்துக்கு ஏலம்போனது. இதை 11 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

Related Stories: