மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதமாக செயல்படாத ஆதார் மையம் இந்த மாதம் முதல் இயங்குகிறது. இங்கு மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதார் சம்மந்தமாக போட்டோ, செல்போன் எண்,பெயர், பிறந்த தேதி, விலாசம் போன்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். மேலும், தாலுகா அலுவலகத்தில் தற்போது ஒரு கணினி மட்டுமே செயல்பாட்டில் உள்ளதால், தினசரி 20 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.