கரூர்: கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் வேலைகக்காக கிராமங்களில் இருந்து நகர பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். பேருந்துகள் இயக்கம் துவக்க நாட்களில் சமூக விலகலுடன் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர். அதன் பின்னர் விதிமுறைகளை கடைபிடிக்காத நிலை உள்ளது. மேலும் காலை வேளைகளில் இடைவெளி விட்டு பேருந்துகளில் வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்டநேரம் காத்திருந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். மாலை நேரத்தில் முற்றிலும் நிலைமை மாறி விடுகிறது. வேலை முடிந்து 6 மணி முதல் 7 மணி வரை ஏராளமானோர் வருவதால் நகர பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு பயணிக்கின்றனர்.