காங்கேயம்: தண்ணீர் தொட்டிக்குள் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே கருக்கபாளையம் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் வீட்டு மனைகளை விற்று வந்தார். வீட்டுமனை பகுதியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டியுள்ளார். இங்கு வீடுகள் வராததாலும் மனை பிரிவு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளதாலும் ஆட்கள் நடமாட்டமும் இன்றி இருந்தது. இந்த நிலையில், நேற்று தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் சென்றபோது அதன் உள்ளே மனித எலும்புக் கூடு கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.