சென்னை மண்டல வாரியாக நிலவரம்: அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,821 பேருக்கு தொற்று உறுதி!!!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் 3, 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் குறிப்பாக சென்னை என்றாலே கொரோனா என்ற சூழல் இன்று மக்கள் மனதில் மாறியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பட்டியலில் அதிலும், சென்னையை பொறுத்தவரையில் அதிரவைக்கக்கூடியதாக உள்ளது. தற்போது, கொரோனா பாதிப்பு குறித்து மண்டல வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் நேற்று வரை 4, 584 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4,821 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பில் ராயபுரம் மண்டலமே அதிகமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தண்டையார் பேட்டை ( 4 ) - 3, 781, தேனாம்பேட்டை ( 9 ) - 3, 464, கோடம்பாக்கம் ( 10 ) - 3, 108 பேருக்கும், திரு.வி.க நகர் ( 6 ) - 2, 660, அண்ணாநகர் ( 8 ) - 2,781, அடையாறு ( 13 ) - 1, 607, திருவெற்றியூர் ( 1 ) - 1, 072, அம்பத்தூர் ( 7 ) - 987, மாதவரம் ( 3 ) - 780, பெருங்குடி ( 4 ) - 536, ஆலந்தூர் ( 12 ) - 587, சோழிங்கநல்லூர் ( 15 ) - 527, மணலி ( 2 ) - 418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: