தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பாஜவில் இணைந்தார்

சென்னை: தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பாஜவில் இணைந்தார். தமிழக பாஜவில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். அப்போது தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் ெபாதுச்செயலாளர் செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.பி.மூர்த்தியார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் கட்சி தலைவர் முகமது பெரோஸ்கான் உள்ளிட்டோர் பாஜவில் இணைந்தனர். அவர்களுக்கு  பாஜ தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கினார்.

சமூக இடைவெளி மிஸ்சிங்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமண மண்டபங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்களுக்கு முரணாக, தனியார் திருமண மண்டபத்தில் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: