சென்னை: தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பாஜவில் இணைந்தார். தமிழக பாஜவில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். அப்போது தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் ெபாதுச்செயலாளர் செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.பி.மூர்த்தியார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் கட்சி தலைவர் முகமது பெரோஸ்கான் உள்ளிட்டோர் பாஜவில் இணைந்தனர். அவர்களுக்கு பாஜ தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கினார்.