சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடை உத்தரவு காரணமாக, பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணம் சீருடை புத்தகங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தச் சொல்லி நிர்பந்திப்பதாகவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தி கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.