சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இது 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். எனவே, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி அறிவித்திருந்தார்.அதன்படி, நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.