மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. தற்போது விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களை இயக்கி வருவதால் மேம்பாலத்தில் அவ்வப்போது சில விபத்துக்களும் நடந்து வருகின்றன. இதேபோல் பைக் ரேஸ் நடத்துதல், சொகுசு கார்களை நிறுத்திவிட்டு மது அருந்துதல் ஆகிய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மேம்பாலத்தின் அகலமான பகுதிகளில், பகல் வேளைகளில் பலரும் சொகுசு, கனரக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் மேம்பால பக்கச்சுவர் பல இடங்களில் விரிசல் கண்டுள்ளது.