விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:  மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி  செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் செங்கை இரா.தமிழரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள்  சூ.க.ஆதவன்,  சு.ரா.ராஜ்குமார், தெ.தென்னவன், தேவ அருள்பிரகாசம், அன்புசெல்வன், சாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர் ரவீந்திரன் வரவேற்றார்.

மண்டல செயலாளர் சு.க.விடுதலை செழியன், அரூன் மணிக்கராஜ்,  ஏழிலரசு, தமிழயணி, ஆதிமொழி ஆகியோர் கலந்துகொண்டுனர். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குமான (ஓபிசி) மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதை  கண்டித்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: