ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க சென்ற முயன்ற தொழிலாளி கந்தசாமி(41) என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது பால் வேன் மோதியதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வேன் ஓட்டுனர் கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.