புதுடெல்லி: டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் உள்ளூர் மக்களுக்கே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அம்மாநில கவர்னர் மாற்றி உள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு எண்ணிக்கை ஞாயிறன்று 28,936 என உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் கூறுகையில், ‘‘டெல்லியில் நோய் பரவல் விகிதம் 14 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன்படி, தற்போதைய நிலையில் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 56,000ஐ தொடும் என நாங்கள் அமைத்த நிபுணர் குழு மதிப்பீடு செய்துள்ளது.