கரூர் : கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டையில் கத்தி குத்தியதில் 30 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நாலுகால் குட்டை பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டை சூதாட்டம் உயிரிழப்பில் முடிந்துள்ளது. சேவல் காலில் கட்டி இருந்த கத்தி குத்தியதில் நெடுங்கூரை சேர்ந்த முருகேசன் என்ற 30 வயது இலைஞரின் தொடையில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியுள்ளது.