காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு-மேல்நிலை முதலாமாண்டு - இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கொரோனா வைரஸ் நோய் தொற்றை பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு-மேல்நிலை முதலாமாண்டு - இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான பணிகளை மேற்கொள்ள உள்ள ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெறும் வகையிலும். ஆசிரியர்கள் முன்னேற்பாட்டு பணிகளை செயல்படுத்தும் பொருட்டும் நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து பயணம் செய்ய ஏதுவாக பின்வரும் வழித்தடங்களில் பேருந்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.