உடன்குடி: சீயோன்நகரில் சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமன்குறிச்சியில் இருந்து சீயோன்நகர், வெள்ளாளன்விளை வழியாக உடன்குடி செல்லும் முக்கியமான வழித்தடமாகும். தினமும் ஏராளமான வாகனங்கள், அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில் சீயோன்நகரை யொட்டியுள்ள பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான முட்செட்டிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.