திண்டிவனம்: திண்டிவனத்தில் பயணிகள் வருகை இல்லாததால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நாளடைவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டிருந்தது. பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சானிடைசர், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.