ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த சன்டையின் போது மதியழகன் காயமடைந்தார். காயமடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் இன்று உயிரிழந்தார். காஷ்மீரில் உள்ள கிராமங்களையும், வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.