டெல்லி : மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக மாநில அரசுகள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020ம் ஆண்டு டபிப்ரவரி வரையிலான 3 மாதங்களுக்கு ரூ.36,400 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது.