மதுரை: மதுரை மாவட்டம், நரசிங்கம்பட்டி குரூப் வெள்ளரிக் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தவமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், மேலூர் தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர், ‘‘எனது செல்ேபானில் வாட்ஸ் அப் வசதி இல்ைல. நீதிபதிகளுடன் செல்போனில் பேச பயமாக உள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘அதிகாரிகளின் செல்போனில் வாட்ஸ் அப் வசதி இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். மடியில் கனமிருந்தால் தான் பயம் இருக்கும். அதிகாரிகள் பயமின்றி பணியாற்ற வேண்டும்’’ என்றனர்.