சென்னை: பெரம்பூரில் அரசுப் பள்ளியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரம்பூர் நெல்வயல் சாலை பார்த்தசாரதி தெருவில் சுமார் 40 வீடுகள் உள்ளன. பார்த்தசாரதி தெருவின் முனையில் உள்ள கைவிடப்பட்ட அரசுப் பள்ளியை கொரோனா வார்டாக மாற்ற முயற்சி செய்யப்பட்டு வருகிறது.