வாடிகன்: ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் உலகளவில் 61,60,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,71,006 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. வாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.