திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் பணிபுரிகின்றனர். விராலிமலையை சேர்ந்த இருவருமே திருமணமானவர்கள். ஆனால், நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பைக்கில் வந்த அந்த வாலிபர், அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி வந்தார். வழியில் மணிகண்டம் பகுதியில் சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, இருட்டு பகுதியில் புதருக்குள் ஒதுங்கினர். அப்போது, 3 வாலிபர்கள் பட்டா கத்திகளுடன் திடீரென அந்த இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் கள்ளக்காதலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரும் அந்த வாலிபரை அடித்து, உதைத்து கை, கால்களை கட்டினர். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.