சென்னை: பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதன் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகத்தில் 200 திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை அடுத்து சென்னை மாவட்டத்தில் எங்குமே விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவில்லை.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 26ம் தேதி விடைக்குறிப்புகள் அச்சிட்டு வழங்கப்பட்டன. அதில் குறிப்பிட்டுள்ள விடைகளை மாணவர்கள் எழுதியிருந்தால் மட்டுமே முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வின்போது, ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்காக மேற்கண்ட இரண்டு வழியிலும் கேள்வித்தாள் அச்சிடப்பட்டதுடன், ஏ, பி என்று இரண்டு பிரிவுகளில் கேள்வித்தாள் அச்சிட்டு வழங்கப்பட்டன.