ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாஸ்தா கோயில் அணை நிரம்பியுள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அடிவார பகுதியின் சாஸ்தா கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.