புதுடெல்லி: பொருளாதார மந்தநிலை காரணமாக பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்து விட்டனர். இந்த சூழ்நிலையில், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், வங்கிகள் அதிக கடன் வழங்குவதை வகை செய்யும் நோக்கிலும் அவை டிவிடெண்ட் வழங்குவதை நிறுத்தி வைத்தது. பங்கு முதலீட்டாளர்களுக்கு நிர்வாகங்கள் முன்பு 30 சதவீத டிவிடெண்ட் வழங்கி வந்தன. பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தின. இதுபோல் வங்கிகளும் டிவிடெண்ட் 22 சதவீதமாக உயர்த்தி இருந்தன. ஆனால், பங்குச்சந்தைகள் சரிந்ததால் நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்க இயலவில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் அவை, இனி மீளுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டிவிடெண்டாவது கிடைக்கும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள், நிறுவனங்களின் இந்த முடிவால் கவலை அடைந்துள்ளனர்.