சக போலீசார் வழங்கினர் சென்னையில் பலியான பெண் காவலர் குடும்பத்திற்கு 12லட்சம் நிதி

பாவூர்சத்திரம்:  தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களது மூத்த மகள் பவித்ரா (22). சென்னை ஆயுதப்படை பிரிவு போலீசாக பணியாற்றி வந்த இவர், கடந்த 5ம் தேதி சென்னையில் சாலை  விபத்தில் இறந்தார். பவித்ராவுடன் 2017ல் சேர்ந்த சக காவலர்கள் ஒன்றிணைந்து தங்களது சம்பளத்தில் இருந்து ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்து 955 திரட்டி, அவரது பெற்றோரிடம் வழங்கினர்.

Related Stories: