புதுடெல்லி: ‘இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பது ஒரு ஆண்டுக்குள் சாத்தியமில்லை,’ என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க, உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் போட்டிப் போட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்திய விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக பிரதமரின் நன்கொடை திட்டமான ‘பிஎம் கேர்ஸ்’ நிதி அறக்கட்டளையில் இருந்து 100 கோடி ஒதுக்கப்பட உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் ஜைடஸ் காடிலா நிறுவனம், சீரம் நிறுவனம், பயாலஜிகல் இ, பாரத் பயோடெக், இண்டியன் இம்முனோலாஜிகல் மற்றும் மையின்வாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக வைரஸ் நிபுணரான ஷாகித் ஜமீல் கூறுகையில், “இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடக்க நிலையில்தான் உள்ளது.